கோவை அதிமக எம்.எல்.ஏ பெயரைச் சொல்லி பணம் வசூல் – போலீஸ் கமிஷனரிடம் புகார்.!!

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சிலர் எனது பெயரைச் சொல்லி கடந்த சில நாட்களாக பணம் வசூலித்து வருகிறார்கள். நான் அவ்வாறு யாரிடமும் எந்த ஒரு பணமோ? நிதியோ? கேட்கவில்லை . எனது நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் என் மீது உள்ள நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக என்னுடைய அனுமதி இல்லாமல் இதுபோன்று செயல்பட்டு வருகிறார்கள். எனக்கு தெரியாமல் என் பெயரையும், நான் வகித்து வரும் எம்எல்ஏ என்ற பொறுப்பையும் மோசடியாக பயன்படுத்தி ஆதாயம் பெறும் நோக்கத்துடன் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.