சைபர் தாக்குதல் நடத்தி கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் வடகொரியா-ஐ.நா. குற்றச்சாட்டு..!

ஐ.நா வின் பாதுகப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையினை நடத்தியுள்ளது.

சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியினால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படி பட்ட சூழ்நிலையிலும் வடகொரியா ஏவுகணை நடத்துவதிலேயே நோக்கம் கொண்டு இருந்து வருகிறது.

இதனிடையில் வடகொரியா பல நாடுகளின் நிதி நிறுவனம் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி கோடிக்கணக்க்கில் பணத்தை திருடி அதனை கொண்டு ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டத்தினை செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தின் இருந்து நடுப்பகுதி வரையிலான காலக்கட்டத்தின் போது மூன்று கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் மட்டும் 50 மில்லியன் வரையிலான டாலர்களை திருடியுள்ளனர். வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிதி நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் வடகொரியாவில் குறிவைக்கப்படுகின்றன” என கூறப்பட்டுள்ளது.