வீடு புகுந்து பெண் மானபங்கம் – காதலன் மீது புகார்..!

கோவை கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் திவ்யா (வயது 29) மதுக்கரையில் உள்ள நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுபிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் இதய நேசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது.இருவரும் கடந்த 5 மாதங்களாக திருமணம் செய்யாமல்  குடும்ப நடத்தி வந்தனர். இவர்களுக்குள் சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.. இந்த நிலையில் இதய நேசன் திவ்யா வீட்டுக்கு குடிபோதையில் சென்றார். அவரை பலவந்தப்படுத்தி மானபங்கம் செய்தாராம். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து திவ்யா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதய நேசன் கொலை மிரட்டல், மானபங்கம் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.