சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது..!

கோவை:
பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ஆச்சிபட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு தோட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து  வந்தனர். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த நவநீதன் (வயது 28), கார்த்திக் (19), சதீஷ் (19), கருப்புசாமி (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.