கோவையில் 56 போலீசாருக்கு பண விருது… கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று வழங்கினார்.!!

கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு -வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர் .இந்த நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து நகை, பணத்தை மீட்ட இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை 56 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பண விருதும் – நற்சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் சேகர் கலந்து கொண்டார்..