செல்போன் பேசும்போது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாப பலி..

கோவை ராமநாதபுரம் பார்சன் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செபாஸ்டின் .பனியன் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் டேவிட் பிரிட்ஜ் ( வயது 24) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ இறுதி ஆண்டு  படித்து வந்தார். நேற்று இவர் அவரது அப்பார்ட்மெண்டில் மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து அவரது தந்தை செபாஷடின் ராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.