கல்லூரி பஸ் பைக் மீது மோதி தொழிலாளி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள இடையர்பாளையம் அன்பு நகர் 2வது விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 55) கூலிதொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி, இடையர்பாளையம் ரோட்டில் காளப்ப நாயக்கன்பாளையம் சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் இவர் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து அவரது மனைவி யசோதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை கல்லூரி பஸ் டிரைவர் அக்பர் அலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.