பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வன்முறை தூண்டிய கோவை வாலிபர் கைது..!

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம் , ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் .இவரது மகன் கவுதம் ( வயது 20) அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார் இவர் “பேடு கேப்டன் 666” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக புகார் வந்தது. இதையடுத்து இவரை குனியமுத்தூர் சப் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று கைது செய்தார். இவர் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.