இளம் பெண்ணின் முகத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபர் கைது

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரப்பெற்றது.. இது தொடர்பாக அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டதில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் அருண்குமார் (வயது 27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்..