இ.எஸ்.ஐ. மருத்துவமனை பெண் தொழிலாளி தற்கொலையில் திடீர் திருப்பம்- கழுத்தை நெரித்து கொலை..!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் 2 – வதாக சின்னத்துரை என்பவரை  திருமணம் செய்து கொண்டார்..இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் கூறப்பட்டது. இது குறித்து இவரது மகன் கார்த்திக் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது தாயார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தில் இரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. நடத்தி வருகிறார்கள்.