கோவை துணை வட்டாட்சியர்கள் 7 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு- கலெக்டர் சமீரன் அதிரடி உத்தரவு..!

கோவை மாவட்ட வருவாய் அலகில் நீதித்துறை நடுவர் பயிற்சிக்கு சென்றுள்ள வட்டாட்சியர்களுக்கு பதிலாக துணை வட்டாட்சியர்கள் 7 பேருக்கு வட்டாட்சியராக தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்னூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சரவணகுமாா், கோவை தெற்கு நகர நிலவரி திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் தலைமை உதவியாளராகப் பணியற்றி வந்த கணேஷ்பாபு, கோவை வடக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுக்கரை வட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சத்தியன், விமான நிலைய ஓடுதள நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், கிணத்துக்கடவில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த சிவகுமார், மதுக்கரை வட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், மதுக்கரை வட்டத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த ரமேஷ்குமார் அன்னூர் வட்டம், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், சூலூா் வட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த மணிவேல், கோவை தெற்கு வட்ட கலால் மேற்பார்வை அலுவலராகவும், ஆனைமலை வட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த வாசுதேவன், ஆனைமலை வட்டம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் தற்காலிக பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும் 5 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்தும் கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் மற்றும் தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர்ந்த விவரத்தை அறிக்கை வாயிலாக அளிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளாா்.