கோவையில் கல்லூரி அருகே போதை மாத்திரை, கஞ்சா விற்றவர் கைது..!

கோவை அருகே உள்ள எஸ், எஸ். குளம் ஒன்றியம் கோயில்பாளையம், குரும்பபாளையம் பகுதியில் கோவில்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது காபி கடை பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரைபிடித்து விசாரணை செய்தனர் .இதில் அவர்கள் இருவரும் சுண்டக்கா பாளையத்தைச் சேர்ந்த பூபாலன், சுப்பிரமணி என்பது தெரியவந்தது .அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது பூபாலன் தப்பி ஓடிவிட்டார். சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா 10 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது,தப்பி ஓடிய பூபாலனை போலீசார் தேடி வருகிறார்கள்..