ஸ்கூட்டர் மீது கார் மோதி கோவை வாலிபர் பரிதாப பலி..!

கோவை மாவட்டம் குன்னத்தூர்,மசக்கவுண்டர் செட்டிபாளையம் பக்கம் உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் விஷ்ணு பிரதாப் ( வயது 24) இவர் நேற்று சரவணம்பட்டி- சக்தி ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் விஷ்ணு பிரதாப் படுகாயம் அடைந்தார் .அவரது காதிலும், மூக்கிலும் ரத்தம் வந்தது. அவர் சிறிது நேரத்தில் அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த கணபதி ,சித்தா தோட்டத்தைச் சேர்ந்த மணி குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.