போக்சோ வழக்கில் கைதான கோவை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை சவுரிபாளையம், மாதா கோவில் வீதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் பீளமேடு அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் தாக்கப்பட்டு சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் அமுதா, அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசிதா ஆகியோர் ஆஜரானார்கள்.