கோவை லாட்ஜில் விபச்சாரம்… 3 பேர் கைது- அழகிகள் மீட்பு.!!

கோவை ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதை நடத்தி வந்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த இப்ராஹிம் கான் என்ற முகமது இப்ராஹிம் (வயது 48) பெங்களூர் டென்னிஸ் (வயது 52) பி,என். புதூர்,சுந்தரம் வீதியை சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா ( வயது 20) சிதம்பரத்தைச் சேர்ந்த டெனியா (வயது 23) பெங்களூர் உஸ்மா கனம் ( வயது 23) ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.