கோவை சூப்பர் மார்க்கெட்டில் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு..!

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரர் ( வயது 42 ) இவர் சத்தி ரோட்டில் ” அனன்யா சூப்பர் மார்க்கெட்”என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன் தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை கழட்டி உள்ள இறங்கி மேஜை டிராயரில் இருந்த ரூ 38 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பரமேஸ்வரன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.