ஓடும் பேருந்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு – சிறுவன் உட்பட 2 பேர் கைது..!

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்சில் ஊட்டி செல்வதற்காக பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை 2 பேர் நைசாக திருடி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பஞ்சலிங்கம் காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சிவந்தாபுரம் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் ( வயது 40) கோவை தேவராயபுரம் புல்லு கவுண்டன் புதூரை சேர்ந்த பாலாஜி (வயது 17) ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .பாலாஜி சிறுவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.