சிகரெட் வாங்குவது போல நடித்து கோவை வியாபாரி மனைவியிடம் செயின் பறிப்பு..!

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள லட்சுமி நகர் ,2வது வீதியைச் சேர்ந்தவர்,மகேந்திரன்.அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது மனைவி விஜயா ( வயது 22) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி கடையின் முன் பைக்கை நிறுத்தினார். விஜயாவிடம் சிகரெட் வேண்டும் என்று கேட்டார்.அவர் பின்னால் திரும்பி சிகரெட் எடுக்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து பீளமேடு போலீசில் விஜயா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய ஆசாமியை தேடி வருகிறார்கள்..