நடு ரோட்டில் கோவை போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் – ஐ டி ஊழியர் உட்பட 2 பேர் கைது..! 

நடு ரோட்டில் கோவை போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் – ஐ டி ஊழியர் உட்பட 2 பேர் கைது..!  கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பத்திரகாளி இவர் நேற்று போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது காரில் இருந்து 2 பேர் மதுஅருந்தி கொண்டிருந்தனர் .இதை பார்த்த போலீஸ்காரர்பத்திரகாளி பொது இடத்தில் இப்படி மது அருந்தக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த 2பேரும் சேர்ந்து போலீஸ்காரர் பத்ரகாளியை தாக்கி அவரது செல்போனை பறித்து ,கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர் .இதில் போலீஸ்காரர் பத்ரகாளி காயம் அடைந்தார் இவர் சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது..போலீசார் வழக்கு பதிவு செய்து போத்தனூர் செட்டிபாளையம் ரோடு, ஸ்ரீ ராம் நகரை சேர்ந்த சிவ சங்கர் (வயது 35) போத்தனூர் சித்தன்னபுரம் இந்திரா நகரை சேர்ந்த ஸ்ரீ விக்னேஷ் (வயது 30)ஆகியோரை செய்தனர் .இவர்களில் ஸ்ரீ விக்னேஷ் ஐ.டி .ஊழியர் ஆவார். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல், கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 5 பிரிவினில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.போலீஸ்காரர் தாக்கப்பட்டசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..