கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!

கோவை, கரும்புக்கடை, திப்பு நகர் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அவரை பிடித்து மூட்டைகளை ஆய்வு செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் போத்தனூர் அன்பு நகர் பகுதியை சேர்ந்த அஜீஸ் என்பவர் உடன் சேர்ந்து இவர் கோவையில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதை கேரளத்துக்கு கடத்தி விற்றதும் தெரிய வந்தது. இதை அடுத்து வேலுமணியை கைது செய்த போலீசார் அதே பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான அஜீஸ் என்பவரை தேடி வருகின்றனர்..