கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..!

கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..!  கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ஜெயப்பிரகாஷ் வங்கி மூலம் ரூ 11 லட்சத்து 73 ஆயிரத்து 542 அனுப்பி வைத்தார்.பகுதி நேர வேலையும் கிடைக்கவில்லை .அந்த எண்ணுடன் பிறகு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.இது குறித்து ஜெயபிரகாஷ் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.