சேவல் சண்டை சூதாட்டம் – 9 பேர் கைது..!

பொள்ளாச்சி அருகே சேவல் சண்டை சூதாட்டம் – 9 பேர் கைது..!  கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டிஅருகே உள்ள பொன்னையூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டைசூதாடியதாக சூளேஸ்வரன் பட்டி ஜெ.ஜெ நகரை சேர்ந்த மணி (வயது 26) மாரிமுத்து( வயது 45) அரிசன காலனி ஜெயபிரகாஷ் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .2 சேவல் களும் ,சூதாட பயன்படுத்தப்பட்ட 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.இதேபோல மேட்டுப்பாளையம் ஆத்து மேடு சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகேசேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக மேட்டுப்பாளையம் போலீஸ் தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பாரூக் (வயது 27) படுகர் காலனி ஜீவா (வயது 28)உட்பட 6பேர் கைது செய்யப்பட்டனர் 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.