கோவை எண்ணெய் கடையில் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை என்.எச். ரோடு ,மானியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் எல். ஜி. மன்சூர் அலி (வயது 43) இவர் பெரிய கடை வீதியில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார் .கடந்த 28ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறந்தார் . அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தபோது மேஜை டிராயரில் இருந்த ரூ 30 ஆயிரம் பணமும், செல்போனும் திருட்டுப் போயிருந்தது.கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி கொள்ளையர்கள் இந்த திருட்டை நடத்தியுள்ளனர். இது குறித்து மன்சூர்அலி  உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..