கடைவீதியில் பெண்ணிடம் 6 பவுன் செயின் திருட்டு – கோவையில் துணிகரம்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தாமஸ்.இவரது மனைவி மேரி (வயது 40) இவர் நேற்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகை கடைக்கு அவரது தங்கச் செயினை மாற்றுவதற்காக வந்தார். அந்த செயினை ஒரு மணிப்பர்சில் போட்டு வைத்திருந்தார் .கடைக்கு போய் பார்த்தபோது பர்சில் இருந்த 6 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலில் யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து மேரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.