கோவை வக்கீல் வீட்டில் பூட்டை உடைத்து வைர மோதிரம், பணம் கொள்ளை – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், சபரி கார்டனைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார் .இந்த நிலையில் சுரேஷ்குமார் வீட்டின் கேட்பூட்டு, முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் சுரேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர் .உடனே அவர் உறவினர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி பார்க்குமாறு கூறினார். அதில் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்து ரூ2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 6 வைர கற்கள் பதித்த தங்க மோதிரம் ரூ 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை.யாரோ மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..