கோவையில் இன்று ஆயுதப்படை போலீசாருக்கு யோகா பயிற்சி..!

கோவை போலீஸ் கமிஷன்ர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான மன நலம், உடல் நலன் , மேம்படுத்தும் யோகா பயிற்சி இன்று காலை நடந்தது. மாநகர காவல் துறை, ஜே .எஸ் .எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் இது நடத்தப்பட்டது. இதில் 230 ஆயுதப் படை காவலர்களும், 40 ஊர்க்காவல் படை வீரர்களும், 160 ஜே .எஸ் எஸ் யோக மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.பயிற்சியில் பங்கு கொண்ட காவலர்களுக்கு இயற்கை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை போலீஸ் கமிஷனர் முரளிதரன், உதவி போலீஸ் கமிஷனர் சேகர் இன்ஸ்பெக்டர்கள் பிரதாப் சிங் ,கோவிந்தராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்..