கோவை வழக்கறிஞரை தாக்கி கொலை மிரட்டல்..!

கோவை அருகே உள்ள சூலூர் பழனியப்ப தேவர் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30) கோவை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருந்தார் . திருச்சி ரோடு , வெஸ்ட் கிளப் ரோடு அருகில் வந்த போது 50 வயது மதிக்கதக்க ஒருவர் இவரை வழிமறித்தார்.வழக்கறிஞர் மணிகண்டன் நிறுத்தினார். அவருக்கு அறிவுரை வழங்கினார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த அவரது மகன் வழக்கறிஞரை தாக்கினார். அப்போது காக்கி உடை அணிந்த 3 பேர் ஆட்டோவில் அங்கு வந்தனர் .அவர்களும் மணிகண்டனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..