கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது..!

கோவை சூலூர் பட்டணம் அருகே உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ பாண்டிபுரா மூர்த்தி ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டிகோவிலில் இருந்த உண்டியல் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் குமார் அந்த கோவிலுக்கு சென்றார் . அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது .இதையடுத்து கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் . அப்போது அதே பகுதி சேர்ந்த விஷ்ணு பிரபு ( வயது 23) என்பவர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடியது தெரியவந்தது. இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணு பிரபுவை கைது செய்தனர்.மேலும் விசாரணை நடந்து வருகிறது..