எலி மருந்து தின்று கோவை கால்டாக்சி டிரைவர் தற்கொலை..

கோவை ரத்தினபுரி, புது தோட்டம் 2 -வது விதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் மணி கண்டன் (வயது 38)சொந்தமாக கால் டாக்சி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இவருக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் எலி மருந்து தின்று கவுண்டம்பாளையம் எருக் கம்பெனி பஸ் ஸ்டாப் அருகே மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மனைவி ரேவதி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..