கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட முன்னாள் காதலன் கைது..!

கோவை : விழுப்புரம் மாவட்டம், அகரம்பாட்டை முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23) இவர் ” கிராபிக் டிசைனர்” படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும்போது கோவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது . இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த இளம்பெண் தினேசிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் தனது செல்போனில் இருந்து இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரல் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து முன்னாள் காதலன் தினேஷை நேற்று கைது செய்தார்..இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.