மின்சாரம் தாக்கி கோவை கல்லூரி மாணவர் பரிதாப பலி..

கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன தடாகத்தைச் சேர்ந்தவர் முருகேசன். டிரைவர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 19) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று இரவில் இவரது வீட்டில் உள்ள விளக்கு திடீரென்று எரியவில்லை. இதனால் மோகன்ராஜ் அங்குள்ள மீட்டர் பாக்சில் பழுது பார்த்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவர் தந்தை முருகேசன் தடாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.