அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை பிணம்- கொலையா..?

அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை பிணம்- கொலையா..?கோவை மாவட்டம் காரமடை, சத்யா நகர் பகுதியில் ரயில்வே புது பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஒருவர் நேற்று பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது .இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி காரமடை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்த திருநங்கையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தது மேட்டுப்பாளையம், நடூர் பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் என்ற நீலா ( வயது 40) என்பது தெரியவந்தது. இவர் திருநங்கையாக காரமடை பகுதியில் சுற்றி வந்ததுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி செத்தார்? என்பது தெரியவில்லை. காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..