கோவை வியாபாரி வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கட் திருடிய வேலைக்கார பெண்னின் மகன் கைது..!

கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ12 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் .இது குறித்து தொழில் அதிபர் பொன்முருகன் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், முத்துசாமி செட்டி வீதியை சேர்ந்த சிவராமன் மனைவி ஜோதி ( வயது 47) என்பவர் திருடியது தெரியவந்தது . இதையடுத்து ஜோதி கைது செய்யப்பட்டார் . அவரிடமிருந்து 98 கிராம் கோல்டு பிஸ்கட் பறிமுதல் செய்யப்பட்டது .மீதமுள்ள தங்க கட்டியைதனது மகன் சவுந்தரிடம்கொடுத்து வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது..இதை யடுத்து போலீசார் சவுந்தரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டது.கைது செய்யப்பட்ட சவுத்தர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..