டாக்டர் வீட்டில் ரூ 1.50 லட்சம் பணம் திருட்டு- வேலைக்கார பெண் மீது புகார்..!

கோவை சுந்தராபுரத்தில்உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ரெக்ஸ்,இவரது மனைவி டாக்டர் ராதிகா (வயது 57) இவர் கடந்த 12 – ஆம் தேதி வீட்டை பூட்டுவிட்டு தனது மகளுடன் பெங்களூர் சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை.அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த கவுரி என்ற பெண்ணும் 2 நாட்களாக வேலைக்கு வரவில்லை.எனவே பணத்தை வேலைக்கார பெண் கவுரி தான் திருடி இருக்கலாம் என்று போத்தனூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.