போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவன் கைது..!

கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைசேர்ந்தவர் 17 வயது மாணவன். இவர் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கும் சூலூர் பக்கம் உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளிக்கூட மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்தனர் .அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த அந்த மாணவியை ஆசை வார்த்தைகள் காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.. இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறினார். சிறுமியின் தயார் கருமத்தம்பட்டி அனைத்துபெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதை யடுத்துஅந்த சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்..