கோவை கத்தோலிக்க பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை..

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஜோசப் சகாயம் ( வயது 58). இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள புனித குழந்தை தெரசாம்பாள் கத்தோலிக்க ஆலயத்தில் பங்கு தந்தையாக ( பாதிரியார்) பணியாற்றி வந்தார்..ஆலய குடியிருப்பில் வசித்து வந்தார்.இவர் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இவர் 1995 ஆம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாக கோவையில் உள்ள பல்வேறு கத்தோலிக்க ஆலயங்களில் பணியாற்றி வந்துள்ளார்.இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இவரது உடலுக்கு ஏராளமான கத்தோலிக்க பாதிரியார்களும்,பொதுமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கத்தோலிக்க பாதிரியார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.