ஆவடி நகை கடையில் துப்பாக்கி முனையில் 1 1/2 கோடி தங்க நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை – 4 பேருக்கு வலை வீச்சு.!!

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை இந்தியன் ஏர்போர்ஸ் சாலையில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகை விற்பனை செய்யும் மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார் புக்கா ராமின் மகன் பிரகாஷ் வயது 33 இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் ரிவால் லோட் துப்பாக்கியை எடுத்து காண்பித்து என்ன சேட் வியாபாரம் எப்படி போகுது  இந்தியாவில் இருந்து எங்க ஊரில் வந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாய் மரியாதையாக வாயை மூடிக் கொண்டு தங்க நகைகளை அள்ளி போடு இல்லையென்றால் எங்களது துப்பாக்கி தான் பேசும் என மிரட்டினர். பயந்து போன பிரகாஷ் நிலை குலைந்து போனார். கொள்ளையர்களோ கடையில் இருக்கின்ற 11/2 கிலோ தங்க நகைகளை வாரி எடுத்துக் கொண்டனர். மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரொக்க பணம் ரூபாய் 5 லட்சத்தை வாரி சுருட்டி கொன்றனர். எங்களை மீறி போலீசுக்கு போனால் டுமீல் டுமீல் தான் என மிரட்டி விட்டு சென்றனர். பயந்து போன பிரகாஷ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழுது கொண்டே தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் பற்றி தாமதமாக கேள்விப்பட்ட முத்தா புதுப்பேட்டை போலீசார் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கை விரல் ரேகைகளை பதிவு செய்து குற்றவாளிகளின் கைரேகை ஒத்துப் போகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கென தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன..