கோவை டாஸ்மாக் கடையில் மோதல்: வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து – 2 பேர் கைது..!

கோவை : ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகன் அருண் பிரசாத் ( வயது 23)இவர் கோவை அருகில் உள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பருடன் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேருக்கும் , இவர்களுக்கும் இடையே குடிபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து அருண் பிரசாத்தை பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது பின்னர்4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.படுகாயம் அடைந்த அருண்பிரசாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த டிரைவர் சிவராஜ் ( வயது 26) மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பெயிண்டர் சுதீஷ் ( வயது 26 )ஆகியோரை கைது செய்தார். அரிகிருஷ்ணன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் மீது கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.