காரில் இருந்து மது குடித்ததைவீடியோ எடுத்த போலீஸ்காரரின் செல்போன் உடைப்பு.கொலை மிரட்டல்”…

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் முத்துக்குமார் ,ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் நேற்று இரவு வி.கே. கே. மேனன்ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போதுஅங்குள்ள ஒரு மண்டபம் முன் காரை நிறுத்தி காருக்குள் 3பேர்மது அருந்தி கொண்டிருந்தனர்.இதை போலீசார் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைசிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வீடியோ எடுத்தார் . இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் முத்துக்குமாரின் செல்போனை வாங்கி உடைத்தனர். பின்னர் காரில் இருந் பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து முத்துக்குமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கவுதம், தேவ்மனோஜ், முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாது தடுத்தல் உட்பட 4பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.