நகைக்கடையில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கக் காசுகள் திருட்டு – வாலிபருக்கு வலை.!!

கோவை சொக்கம்புதூர் ,அருள் கார்டன்பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் .இவரது மனைவி ஸ்ரீதேவி ( வயது 44 ) இவர் ஆர். எஸ் .புரம், வெங்கடாசலம் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையை நெல்லை மாவட்டம் ரமண சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ( வயது 28 ) என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பிறகு கடைக்குள் போய் பார்த்த போது லாக்கரில் இருந்த 394 கிராம் எடை கொண்ட 122 தங்க காசுகளை காணவில்லை. முத்துக்குமார் இவைகளை திருடிவிட்டு நைசாக தப்பி ஓடி விட்டார். இது குறித்து ஸ்ரீதேவி ஆர் .எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வருகிறார்..