தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது..!

கோவை : தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே காட்டூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒருவர் கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சபரி ( வயது 32 )என்பது தெரியவந்தது .இவர் கோவை மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக உள்ளார். அவரிடம் இருந்து 10 கேரளா லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.