கோவை விவசாய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை வழக்கு : சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு..!

கோவை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பழனி .அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் பீரோ தாஸ் குமார் ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து’பயோடெக்’ முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரோ தாஸ் குமாருக்கு இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க ஆசை இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த பிரிவில் இடம் கிடைக்காததால் ‘பயோடெக்’ பிரிவில் சேர்ந்துள்ளார். விரும்பிய பிரிவில் சீட் கிடைக்காததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் கடந்த 10 ஆம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கு இடையே பள்ளி -கல்லூரி போன்றகல்வி நிலையங்களிலோ, அல்லது அவற்றுக்கு சொந்தமான விடுதிகளிலோ மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடந்தால் சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் ஐகோர்ட் அறிவுறுத்தி இருந்தது. எனவே மாணவர் பிரோ தாஸ் குமார் தற்கொலை வழக்கையும் சி.பி .சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார் .இதை யடுத்து இந்த வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்குமாற்றப்பட்டது. சிபி.சிஐ.டி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் மாணவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து மாணவரின் சொந்த ஊருக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.