73 வயது மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை..

கோவை சூலூர்பக்கம் உள்ள வஞ்சிபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி ரங்கம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் தனது தங்கையுடன் வசித்து வந்தார்.கண் பார்வை பாதிக்கப்பட்டு இருந்தது.இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரங்கம்மாள் நேற்று அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுல்தான் பேட்டைபோலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினருடன் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.