தோட்டத்தில் புகுந்து மாடு திருடிய 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சப்பே கவுண்டன் புதூர் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 62) விவசாயி.சுங்கத்தில் உள்ள தோட்டத்தில் கட்டியிருந்த மாட்டை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பராம்பாளையத்தைச் சேர்ந்த மாசாணி (வயது 23) பிரகாஷ் (வயது 27) ஆகியோரை நேற்று கைது செய்தனர் மேலும் விசாரணை நடந்து வருகிறது.