ஸ்கூட்டரில் 3 கிலோ கஞ்சா கடத்தல் – வடமாநில தொழிலாளி கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாம்பாளையம்- பொன்னே கவுண்டன்புதூர் ரோட்டில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். ஸ்கூட்டரில் 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்கூட்டரும் .கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த அக்ஷய தாஸ் (வயது 46) கைது செய்யப்பட்டார். இவர் அந்த பகுதியில் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்தார்.இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.