பட்டா கத்தியுடன் ரீல்ஸ்… மீண்டும் ஒரு இன்ஸ்டாகிராம் இளைஞர் சிக்கினார்..!

கோவை மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகள் பரப்பும் நபர்கள் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு வினோதினி என்கிற தமன்னா என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகள் பரப்பியதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது தருண் என்கிற நபர் இன்ஸ்டாகிராமில் கத்தி காட்டி மிரட்டும் தொனியில் வீடியோ காட்சிகள் வெளியிட்டுள்ளார். Cyber Crime தனிப்படையினர் தருண் என்கிற இன்பெஃண்ட் ராக் மீது ஆயுதங்கள் வைத்து சமூக வலைதளத்தில் அச்சுறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருண் வளைதள பக்கங்கள் யாரும் தொடர முடியாதபடியும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.