கோவை மைதானத்தில் மோதல் : 2 பேருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது..!

கோவை வடவள்ளியில் உள்ள ஐ.ஓ.பி காலனியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் அரவிந்த் ( வயது 30) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கார் ஒன்று வாங்கினார். அந்த காரை தனது நண்பரிடம் காட்டுவதற்காக ஆர் .எஸ். புரம், பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு காருடன் சென்றார் .அங்கு அவருடைய நண்பர்கள் சரவணக்குமார் ,சீனிவாச பிரபு ,அரவிந்தன், ஆகியோரும் வந்திருந்தனர். புதிய காரை மைதானத்தில் ஒட்டிப் பார்த்தனர். அப்போது அங்கு காந்திபுரத்தை சேர்ந்த கார்த்திக் பாபு என்பவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது .இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் கார்த்திக் பாபு மீது அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அரவிந்த் மீது கார்த்திக் பாபு ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் ஆர் . புரம், மைதானத்தில் வைத்து மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கார்த்திக் பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரவிந்தை குத்த முயன்றார்.இதை தடுத்தபோது அரவிந்தனின் இடது கை மற்றும் விரல்களில் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க முயன்ற அரவிந்த் நண்பர் சரவணகுமார் தலையிலும் கத்தி குத்து விழுந்தது ..இதைப் பார்த்த அந்த வழியாக வந்த பொதுமக்கள் கார்த்திக்கை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார் இது குறித்து ஆர் .எஸ். புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய அரவிந்த் சரவணகுமார் ஆகியோர் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர், எஸ். புரம் போலீசார் கொலை முயற்சிவழக்கு பதிவு செய்து கார்த்திக் பாபு (வயது 38) பேரூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 22 )கள்ளிமேட்டைச் சேர்ந்த நடேஷ் குமார் ( வயது 37)பி .என். புதூர்ஸ்ரீதர் (வயது 20) ஆகிய 4 பேரை நேற்று இரவ கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள ஜீவா என்பவரை தேடி வருகிறார்கள்.