இங்கிலாந்தின் புதிய உள்துறை மந்திரியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் சூலா பிரேவர்மென் நியமனம்..!

லண்டன் : இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது உள்துறை மந்திரியாக பணியாற்றிவந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா நேற்று செய்தார். தற்போது, இங்கிலாந்து நாட்டின் புதிய உள்துறை மந்திரியாக சூலா பிரேவர்மென் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சூலா பிரேவர்மென் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். சூலா பிரேவர்மெனின் தாய் உமா, தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் 1960-ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தில் குடியேறினார். இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிரிஸ்டி பெர்னாண்டஸ் சூலா பிரேவர்மெனின் தந்தை ஆவார்.

சூலா 2018-ம் ஆண்டு ரெயல் பிரேவர்மென் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பர்ஹம் தொகுதி எம்.பி.யான சூலா பிரேவர்மென் இங்கிலாந்து அரசு வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். லிஸ் டிரஸ் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சூலா பிரேவர்மென் நாட்டின் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சூலா பிரேவர்மெனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.