லாரி மோதி சென்டரிங் தொழிலாளி பலி..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (60). சென்டரிங் தொழிலாளியான இவர் சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் மதியம் நடந்து சென்று கொண்டிருந்தார். வரதம்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்ற போது அவ்வழியே வந்த சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணன் மது போதையில் நடந்து சென்றாரா அல்லது உடல் நலக்குறைவா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.