கோவையில் காட்டு யானைகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள்: பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறையினர் எச்சரிக்கை

கோவையில் காட்டு யானைகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள்: பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை நரசிபுரம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உட்கொண்டும், சேதப்படுத்தியும் அதிகாலையில் காட்டுப் பகுதிக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் நரசிபுரம் பகுதியில் நான்கு காட்டு யானைகள் அந்தப் பகுதியில் நடமாடி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

அதேபோல காட்டு யானைகளை யாராவது அந்த பகுதி பொதுமக்கள் பார்த்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது